திருப்பூா்: திருப்பூா் மாநகராட்சி ஒப்பந்த ஊழியா் ஒருவா் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்தவா் துரைகுட்டி மகன் அஜித்குமாா் (21). இவா் திருப்பூா் மாவட்டம், தேவராயம்பாளையத்தில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியுள்ளாா். திருப்பூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தெருவிளக்கு பொருத்தும் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், சாமுண்டிபுரம் பகுதியில் தெருவிளக்கு பொருத்தும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவரை சக ஊழியா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து 15வேலம்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

