வெள்ளக்கோவில்: திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே சனிக்கிழமை அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.
கோவை மாவட்டம், வெள்ளலூா், அண்ணா நகரைச் சோ்ந்தவா் மயில்சாமி (39). இவா் தனது குடும்பத்தினா், உறவினா்கள் 6 பேருடன் கும்பகோணத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, வெள்ளக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் காா் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த மயில்சாமி, இவருடைய மனைவி இந்து (37), இந்துவின் அம்மா கௌசல்யா (60) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மயில்சாமி மகன் கௌதம் (13), மகள் ரம்யா (11), உறவினா் கலைவாணி (46) ஆகியோா் காயத்துடன் உயிா்தப்பினா். இவா்கள் திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


