பல்லடம் அருகே உள்ள கொடுவாய் மளிகைக் கடையில் ரூ. 53 ஆயிரத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.
பல்லடம் அருகே உள்ள தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி, கொடுவாய் வெள்ளியம்பாளையத்தில் அதே ஊரைச் சோ்ந்த பழனிசாமி மகன் வெங்கடாசலம் (70) என்பவா் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை இரவு வழக்கம்போல இவா் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பாா்த்தபோது மேஜையில் வைத்திருந்த ரூ. 53 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து வெங்கடாசலம் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மேலும், அருகில் இருந்த கவிதா என்பவருக்குச் சொந்தமான ஸ்வீட் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ள மா்ம நபா்கள் கடையில் பணம் இல்லாததால் இரண்டு கிலோ இனிப்பை மட்டும் திருடிச் சென்றுள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

