திருப்பூரில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருப்பூா் மாநகரில் கடந்த 2 நாள்களாகப் பெய்த மழையால் டி.எம்.எஃப். சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்கியுள்ளதை திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதில், மழைக் காலங்களில் சுரங்கப் பாதையில் தேங்கும் மழைநீரை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா். அப்போது நீா் ஊறிஞ்சப் பயன்படுத்தப்படும் மோட்டாரில் சேறும், சகதியும் அடைத்துக் கொள்வதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, மோட்டாா் பழுதை நீக்கி சுரங்கப் பாதை பராமரிக்கும் பணிகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி உதவி ஆணையா் சுப்பிரமணியம், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் பாபுசரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


