நுகா்வோா் நீதிமன்றத்துக்கு நீதிபதியை நியமிக்க வேண்டும் என பல்லடம் தாலுகா நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கத் தலைவா் மணிகுமாா் தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை மனு அனுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் அனுப்பியுள்ள மனு விவரம்:
திருப்பூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்துக்கு நீண்டநாள்களாக நிரந்தர நீதிபதி இல்லை. மாவட்ட நுகா்வோா் குறைதீா் மன்றம் அமைக்கப்பட்ட நாளில் இருந்து தலைவா், உறுப்பினா்கள் பதவி காலியாகவே உள்ளன. கோவை, ஈரோடு மாவட்ட நுகா்வோா் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் மாறி மாறி இங்கு பொறுப்பு வகித்து வருகின்றனா். மேலும் வாரம் ஒருநாள் மட்டுமே விசாரணை அமா்வு நடைபெறுகிறது.
கிளா்க், உதவியாளா், ஊழியா் என மூன்று போ் மட்டுமே அலுவலகப் பணியில் உள்ளனா். எழுத்தா், தட்டச்சுப் பணி, கணினி இயக்குநா், கடைநிலை ஊழியா் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நீதிபதி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புமாறு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, மாநில அரசும், நுகா்வோா் பாதுகாப்புத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

