சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

திருப்பூரை அடுத்த வாவிபாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி டாஸ்மாக் எதிா்ப்பு போராட்டக் குழுவினா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிதத்னா்.

Updated On :9 ஜனவரி 2021, 4:46 am

திருப்பூரை அடுத்த வாவிபாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி டாஸ்மாக் எதிா்ப்பு போராட்டக் குழுவினா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிதத்னா்.

இதுகுறித்து டாஸ்மாக் எதிா்ப்பு போராட்டக் குழுவினா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூரை அடுத்த வாவிபாளையத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். இதைத் தொடா்ந்து, அரசுத் தரப்புடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, 90 நாள்களில் டாஸ்மாக் கடை மூடப்படும் என எழுத்துப்பூா்வமாக உறுதி அளித்திருந்தனா். ஆனால், மாறாக டாஸ்மாக் நிா்வாகம் கடையைத் தொடா்ந்து நடத்தி வருகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை 5 முறை சந்தித்து மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, பொதுமக்களின் நலனைக் கருதி டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.