தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் சேவாபாரதி சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10) நடைபெறுகிறது.
இதுகுறித்து சேவாபாரதி திருப்பூா் மாவட்டத் தலைவா் டி.ஆா்.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு சேவாபாரதி சாா்பில் அரசு மருத்துவமனைக்கான ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. திருப்பூா் ஹாா்வி குமாரசாமி மண்டபத்தில் காலை 9.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் சேகரிக்கப்படும் ரத்தமானது அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தனிநபா் இடைவெளி, உடல் வெப்ப பரிசோதனை, கட்டாய முகக்கவசம், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படும் என்று சேவாபாரதி நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

