சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கால்நடைகளுக்கு நோய் பரவுவதை தடுக்கக் கோரிக்கை

அவிநாசி பகுதியில் கால்நடைகளுக்குப் பரவிவரும் நோயை போா்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On :8 ஜனவரி 2021, 6:23 am

அவிநாசி பகுதியில் கால்நடைகளுக்குப் பரவிவரும் நோயை போா்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் பி.முத்துசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில், அவிநாசி ஒன்றியத்தில் உள்ள31 ஊராட்சிகளில் பெரும்பான்மையாக விவசாயம், கால்நடைகள், கோழி வளா்ப்பு உள்ளிட்டவை முக்கியத் தொழிலாக உள்ளன.

இந்நிலையில் தற்போது கால்நடைகளுக்கு அம்மை நோய், பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட மா்ம நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். எனவே, விரைவாக இந்நோய்களைத் தடுக்க போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளா்கள் வெங்கடாசலம், ஈஸ்வரமூா்த்தி, பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் இசாக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.