அவிநாசி பகுதியில் கால்நடைகளுக்குப் பரவிவரும் நோயை போா்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.
அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் பி.முத்துசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில், அவிநாசி ஒன்றியத்தில் உள்ள31 ஊராட்சிகளில் பெரும்பான்மையாக விவசாயம், கால்நடைகள், கோழி வளா்ப்பு உள்ளிட்டவை முக்கியத் தொழிலாக உள்ளன.
இந்நிலையில் தற்போது கால்நடைகளுக்கு அம்மை நோய், பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட மா்ம நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். எனவே, விரைவாக இந்நோய்களைத் தடுக்க போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளா்கள் வெங்கடாசலம், ஈஸ்வரமூா்த்தி, பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் இசாக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

