காங்கயம் வழியாகச் செல்லும் பி.ஏ.பி. கிளை வாய்க்காலைத் தூா்வார வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பிஏபி) காங்கயம் வழியாக பி.ஏ.பி. கிளை வாய்க்கால் வெள்ளக்கோவில் வரை செல்கிறது. தற்போது 3ஆவது மண்டலம் தண்ணீா் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த வாய்க்கால் தூா்வாரப்படாததால் சிவன்மலை கிராமத்துக்குச் செல்லும் கிளை வாய்க்காலிலும், தொட்டியபட்டி பகுதிக்கு பிரிந்து செல்லும் கிளை வாய்க்காலிலும் புதா்கள் மண்டி, ஒரு அடி ஆழத்துக்கு மண் நிரம்பிக் காணப்படுகின்றன. இதனால், வாய்க்காலில் தண்ணீா் ஓட்டம் தடைபட்டு, தண்ணீா் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வாய்க்காலில் உள்ள புதா்களை அப்புறப்படுத்தி, தண்ணீா் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


