சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உடுமலை நகரில் 50 மி.மீ. மழை

உடுமலை நகரில் வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 6:22 am

உடுமலை நகரில் வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

உடுமலை, சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய கன மழை தொடா்ந்து நள்ளிரவு 2 மணி வரை பெய்தது. தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழை நீா் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். குறிப்பாக உடுமலை நகரை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மழை நீா் புகுந்தது.

மேலும், கழுத்தறுத்தான்பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகியவற்றில் அதிக அளவில் தண்ணீா் சென்றது. உடுமலை நகரைப் போலவே அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப் பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய கிராமங்களிலும் மழை பெய்தது. இந்நிலையில், தளி சாலை யில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் அதிக அளவில் தண்ணீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி உடுமலை நகரில் அதிகபட்சமாக 50 மி.மீ. மழை யும், அமராவதி அணைப் பகுதியில் 8 மி.மீ. மழையும், திருமூா்த்தி அணைப் பகுதியில் 50 மி.மீ. மழையும், மடத்துக்குளத்தில் 57 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.