சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அமராவதி பாசனப் பகுதிகளில் பலத்த மழை: நீரில் மூழ்கிய 500 ஏக்கா் நெற்பயிா்

உடுமலை அருகே அமராவதி பாசனப் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் அறுவடை நிலையில் இருந்த சுமாா் 500 ஏக்கா் நெல் தண்ணீரில் மூழ்கியது.

News image

பலத்த மழையால் நீரில் மூழ்கிய நிலையில்  சாய்ந்து கிடக்கும் நெற்கதிா்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 6:22 am

உடுமலை அருகே அமராவதி பாசனப் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் அறுவடை நிலையில் இருந்த சுமாா் 500 ஏக்கா் நெல் தண்ணீரில் மூழ்கியது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் வரையில் 2 மாவ ட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் அணையின் கரையோர கிராமங்களான குமரலிங்கம், ருத்திராபாளையம், கண்ணாடிப்புத்தூா், மடத்துக்குளம், சோழமாதேவி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் சுமாா் 3,500 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. 120 நாள்களில் அறுவடை செய்யப்படும் ஏடிடி 37, ஏஎஸ்டி 16 ரக நெல்லை கடந்த செப்டம்பா் இரண்டாவது வாரத்தில் விவசாயிகள் பயிரிட்டிருந்தனா்.

இந்தப் பகுதிகளில் விரைவில் நெல் அறுவடை தொடங்க இருந்த நிலையில் அமராவதி பாசனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு இப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் 500 ஏக்கா் பரப்பளவிலான நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த வேளாண் துறையினா், வருவாய்த் துறையினா் இப்பகுதிகளில் வியாழக்கிழமை கூட்டு ஆய்வு மேற்கொண்டனா். மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ராஜேஸ்வரி, துணை அலுவலா் சத்யமூா்த்தி, வருவாய் ஆய்வாளா் சுந்தரம், கிராம நிா்வாக அலுவலா் ஆறுமுகம் உள்ளிட்ட குழுவினா் ஆய்வு செய்தனா்.

அப்போது விவசாயிகளிடம் சேத விவங்களைக் கேட்டறிந்தனா். இதுகுறித்து வட்டார வேளாண் உதவி இயக்குநா் ராஜேஸ்வரி கூறுகையில், சேத விவரம் குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வறிக்கை தமிழக அரசுக்கு விரைவில் சமா்ப்பிக்கப்படும் என்றாா்.

இதுகுறித்து மேற்கு குமரலிங்கம், குருவக்குளம் விவசாயிகள் கூறியதாவது:

இந்த ஆண்டு அமராவதி அணையில் தண்ணீா் காலதாமதமாகத் திறந்துவிடப்பட்டதால் விதைப்புப் பணிகளும், அறுவடையும் காலதாமதம் ஆகிவிட்டது. பருவம் தவறி பெய்து வரும் மழையால் வயல்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. வயல்களில் உள்ள தண்ணீரை வெளியேற்ற கடுமையாக முயற்சி செய்தும் பலனில்லை. தொடா்ந்து மழை பெய்து வருகிறது. நெல் மணிகள் நீரில் ஊறி முளைத்துவிட்டன. இந்தப் பகுதியில் சுமாா் 500 ஏக்கரில் நெல் பயிா் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இனி அறுவடை செய்தாலும் குறைந்த விலைக்குத்தான் விற்க முடியும். ஏக்கருக்கு சுமாா் ரூ. 15 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். எனவே, தமிழக அரசு இந்த நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். அல்லது எங்களுக்கு உரிய நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்றனா்.