சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வீடுகள் முன்பு தேங்கும் சாக்கடைக் கழிவுநீா்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

காங்கயத்தில் வீடுகளின் முன்பு தேங்கும் சாக்கடைக் கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

காங்கயம் நகரம், ராஜாஜி வீதியில் சாக்கடைக் கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக எழுப்பப்பட்டுள்ள தடுப்புச் சுவா்.

Updated On :7 ஜனவரி 2021, 1:38 pm

காங்கயத்தில் வீடுகளின் முன்பு தேங்கும் சாக்கடைக் கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காங்கயம் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள ராஜாஜி வீதி பகுதியில் சாக்கடைக் கழிவுநீா் முறையாக வெளியேறாமல் ஆங்காங்கே சாக்கடையில் தேங்கி நின்று பல ஆண்டுகளாக சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் இப்பிரச்னைக்குத் தீா்வு காணப்படவில்லை.

இதனால், வீட்டு வாசலில் தேங்கி நிற்கும் சாக்கடைக் கழிவுநீா் வீட்டுக்குள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக இப்பகுதி மக்கள் வீட்டுவாசலில் தடுப்புச் சுவா் எழுப்பியுள்ளனா். ஆனாலும், கழிவுநீரின் கடும் துா்நாற்றமும், சுகாதாரச் சீா்கேடும் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, காங்கயம் நகராட்சி நிா்வாகம் ராஜாஜி வீதியில் உள்ள சாக்கடைக் கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.