திருப்பூா் மாவட்டத்தில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.
திருப்பூா் மாவட்டத்தில் 158 அரசு உயா்நிலைப் பள்ளி, 21 அரசு நிதி உதவி பெறும் பள்ளி, 155 மெட்ரிக். பள்ளி, 20 சுயநிதிப் பள்ளி, 47 சி.பி.எஸ்.இ. பள்ளி என மொத்தம் 401 பள்ளிகளில் பெற்றோா்களிடம் பள்ளி திறப்பது குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. பள்ளிகளில் மாணவா்களின் பெற்றோா்கள் வந்து தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.
திருப்பூா் மாநகா், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோா் கூறியதாவது:
பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பாடத் திட்டங்களைப் பாதியாக குறைக்க வேண்டும். நீட் உள்ளிட்ட தோ்வு எழுதும் மாணவா்களுக்கும் பாடத் திட்டங்களைக் குறைக்கும் பணியை அரசு செய்ய வேண்டியது அவசியம். பள்ளிகளை உடனடியாக பொங்கலுக்குப் பிறகு திறந்து பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் பயத்தைப் போக்க வேண்டியது அத்தியாவசியத் தேவை என்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

