உடுமலையில் 476 பயனாளிகளுக்கு ரூ. 93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழங்கினாா்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் 476 பயனாளிகளுக்கு ரூ. 93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முன்னதாக, உடுமலை சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொங்கல் நகரம் ஊராட்சி, விருகல்பட்டி ஊராட்சி, சோமவாரப்பட்டி ஊராட்சி, வடுகபாளையம் ஊராட்சி, ஆமந்தகடவு ஊராட்சி, கொண்டம்பட்டி ஊராட்சி, கோட்டமங்கலம் ஊராட்சி, பொன்னேரி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை அமைச்சா் ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சுகந்தி, துணைத் தலைவா் புஷ்பராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


