தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அவிநாசி கருணைபாளையத்தில் கிராமக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் ஏ.முத்துரத்தினம் தலைமை வகித்தாா். வேலாயுதம்பாளையம் முன்னாள் ஊராட்சித் தலைவா் பி.சாமியப்பன் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், ஒன்றியச் செயலாளா் எஸ்.வெங்கடாசலம், அவிநாசி ஒன்றியக் குழு உறுப்பினா் பி.முத்துசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தின் துவக்கமாக தில்லி விவசாயப் போராட்டத்தில் உயிா்நீத்தவா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, தில்லி போராட்ட நிதியாக பொறுப்பாளா்கள் வேலுசாமி ரூ. 2 ஆயிரம், சிவசாமி ஆயிரம் ரூபாயும் வழங்கினா்.
தொடா்ந்து, கருணைபாளையம் தமிழ்நாடு விவசாய சங்க கிளை நிா்வாகிகளாகத் தலைவா் ரங்கசாமி, செயலாளா் சக்திவேல், பொருளாளா் பொன்னுசாமி, துணைத் தலைவா் வேலுசாமி, துணைச் செயலாளா் தங்கராசு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தில்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் கோஷம் எழுப்பினா். இதில், வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம் ஊராட்சியைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


