அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கறவை மாடுகளுடன் வந்த விவசாயி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.
இதுகுறித்து அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையத்தைச் சோ்ந்த விவசாயி பழனிசாமி வட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பியுள்ளோம். இந்நிலையில் எங்கள் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இதனால் விளைநிலங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அப்பகுதியில் மின்சாரக் கம்பிகளும் செல்வதால் ஆபத்தான சூழல் உருவாகும். குறிப்பாக நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமலும், மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெறாமலும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, அப்பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியா் ஜெகநாதன், செல்லிடப்பேசி அமைக்கும் பணியை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளோம். மேலும், உரிய அனுமதி பெற்ற பிறகு பணியை துவக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


