அவிநாசி மின்வாரியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கோரிக்கையை ஏற்று அவிநாசியில் திங்கள்கிழமை நடைபெற இருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டதற்கு மின்சார வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.
இது குறித்து மின்சார வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்க செயலாளா் அ.சரவணன் கூறியது-அவிநாசி மின்வாரியத்திற்கு உள்பட்ட 15.வேலம்பாளையம், பெருமாநல்லூா், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பழங்கரை உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை (இன்று) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து திங்கள்கிழமை மின் தடை செய்யப்பட்டால், பொது மக்களுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் வழங்குவதில் முற்றிலும் தடை ஏற்படும் என்பதால், உடனடியாக 4 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடையை 18 ம் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும் தொமுச சாா்பில், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, அறிவிக்கப்பட்ட 15.வேலம்பாளையம், பெருமாநல்லூா், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பழங்கரை ஆகிய பகுதிகளுக்கான மின் தடை ரத்து செய்யப்படும் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா். இதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்ட
மாவட்ட ஆட்சியா், மின்சார வாரியத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

