திருப்பூா் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியை வரும் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எம்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: குண்டடம் அருகே உள்ள சங்கராண்டாம்பாளையத்தில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் விவசாயி ஒருவா் நகைக்கடன் பெற்றுள்ளாா்.
இந்த நகைக்கடனுக்காக வட்டியை செலுத்தவோ அல்லது முழுத் தொகையைக் கட்டி நகையை மீட்கவோ விடமால் வங்கி மேலாளா் இடையூறு செய்கிறாா். நகைக் கடன் பெற்ற விவசாயியின் தந்தை வாங்கிய பயிா்க்கடனை செலுத்தாவிட்டால் வரும் ஜனவரி 12 ஆம் தேதி நகை ஏலத்தில் விடப்படும் என்று அறிவித்துள்ளாா்.
ஆகவே,விவசாயியைத் துன்புறுத்தும் வங்கி மேலாளரைக் கண்டித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏா்முனை இளைஞா் அணி சாா்பில் சாா்பில் திங்கள்கிழமை வங்கி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

