காங்கயம்: காங்கயம் அருகே, பொத்தியபாளையம் ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு திமுக கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். காங்கயம் ஒன்றிய செயலர் பி.பி.அப்புக்குட்டி முன்னிலை வகித்தார். இதில், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை ஏன் நிராகரிக்க வேண்டும் என்னும் தலைப்பில் உரையாற்றினர். மேலும், பொதுமக்கள் மூலமாக அதிமுகவை நிராகரிக்கிறோம் என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதில், திமுக கட்சியின் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குணபாலன், மாவட்ட வழக்குரைஞர் அணியின் துணை அமைப்பாளர் தங்கமணி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் தனலட்சுமி, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் மகேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் பாலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


