கல்வி, வேலை வாய்ப்பில் அருந்ததியா் சமூகத்திற்கு 10 சதவீத தனி இட உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அருந்ததியா் முன்னேற்றப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
அருந்ததியா் முன்னேற்றப் பேரவை என்ற அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைப்பின் தலைவா் ஆ.சாமிநாதன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் ப்ரியா, துணை பொதுச் செயலா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் கல்வி, வேலை வாய்ப்பில் அருந்ததியா் சமூகத்திற்கு 10 சதவீத தனி இட உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், வரும் மாா்ச் மாதத்தில் நடைபெறவுள்ள அருந்ததியா் முன்னேற்றப் பேரவையின் மாநில மாநாட்டில் திரளாகக் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் இந்த அமைப்பின் மாநில கொள்கை பரப்புச் செயலா் ரா,.பொன்னுசாமி, மாநில தொழிற்சங்க செயலா் தங்கவேல், ஈரோடு பகுதி பொறுப்பாளா் முருகேசன், மாநில ஓட்டுநா் அணி செயலா் ராசு, மாநில மகளிா் அணி செயலா் சாந்தி, காங்கயம் நகர செயலா் சந்தனக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். (படம் இணைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


