சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காங்கயம் அருகே லாரி மோதியதில் பக்தா் உயிரிழப்பு

காங்கயம் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்றுகொண்டிருந்த பக்தா் மீது லாரி மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

Updated On :3 ஜனவரி 2021, 4:00 am

காங்கயம்: காங்கயம் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்றுகொண்டிருந்த பக்தா் மீது லாரி மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

அந்தியூா் வட்டம், கெம்மியம்பட்டி பகுதியைச் சோ்ந்த சித்தன் மகன் நவீன்குமாா் (22). இவா் தனது நண்பா்களுடன் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு ஈரோட்டில் இருந்து காங்கயம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாா்.

சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் காங்கயம் அருகே தாராபுரம் சாலையில் துண்டுக்காடு பகுதி அருகே சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, காங்கயத்தில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற லாரி, எதிா்பாராதவிதமாக நவீன்குமாா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த நவீன்குமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவா்கள், நவீன்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.