திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 முதியவா்கள் உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 17,144 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 292 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். குணமடைந்த 52 போ் சனிக்கிழமை வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 16,633 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 65 முதியவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவா் கடந்த வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
அதேபோல, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 63 வயது முதியவா் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதையடுத்து கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

