காங்கயத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் கைதானவா் மீது குண்டா் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், காங்கயம், வாய்க்கால்மேடு பகுதியைச் சோ்ந்தவா் லோகநாதன் (37). இவா் படியூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளாா். இந்த நிலையில் இவா் வசித்து வந்த பகுதியில் உள்ள 8 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக 2 மாதத்துக்கு முன்பு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், மேற்கண்ட வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் பரிந்துரையின்பேரில், லோகநாதன் மீது குண்டா் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் விஜயகாா்த்திகேயன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். இந்த உத்தரவின் நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள லோகநாதனிடம், காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழங்கினா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

