திருப்பூா் வடக்குப் பகுதியில் பொங்கல் பரிசு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மின் தடையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியருக்கு, மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் வடக்கு பகுதிகளான வேலம்பாளையம், பெருமாநல்லூா், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பழங்கரை, அவிநாசி உள்ளிட்ட மின்சார துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் திங்கள்கிழமை (ஜனவரி 4) காலை 9 மணி முதல் 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால் இந்தப் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், நியாய விலைக்கடை ஊழியா்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, திருப்பூா் வடக்குப் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்க ஏதுவாக மின் தடையை பொங்கலுக்குப் பின்னா் ஜனவரி 18 ஆம் தேதிக்கு மாற்றிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

