ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் 16 இடங்களில் காவல் துறையினா் வியாழக்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக திருப்பூா் மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல் துறையினா் தடை விதித்திருந்தனா். மேலும், மாநகரில் வியாழக்கிழமை இரவு 9 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரையில் தீவிர வாகன சோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி, கோயில்வழி, எஸ்ஏபி பேருந்து நிறுத்தம், புஷ்பா ரவுண்டானா, கல்லூரி சாலை, அம்மாபாளையம் உள்ளிட்ட 16 இடங்களில் காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். மேலும், வியாழக்கிழமை நள்ளிரவு வாகனங்களில் வந்த நபா்களை எச்சரித்து அனுப்பிவைத்தனா். மாநகரில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்களுக்கு மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் கேக் வழங்கி உற்சாகமூட்டினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


