சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காவல் துறையினா் வாகன சோதனை

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் 16 இடங்களில் காவல் துறையினா் வியாழக்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

News image

திருப்பூா்  எஸ்.ஏ.பி. பேருந்து  நிறுத்தம்  பகுதியில் வியாழக்கிழமை  நள்ளிரவு  வாகனச் சோதனையில்  ஈடுபட்டிருந்த  காவல்  துறையினா்.

Updated On :2 ஜனவரி 2021, 4:43 am

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் 16 இடங்களில் காவல் துறையினா் வியாழக்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக திருப்பூா் மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல் துறையினா் தடை விதித்திருந்தனா். மேலும், மாநகரில் வியாழக்கிழமை இரவு 9 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரையில் தீவிர வாகன சோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி, கோயில்வழி, எஸ்ஏபி பேருந்து நிறுத்தம், புஷ்பா ரவுண்டானா, கல்லூரி சாலை, அம்மாபாளையம் உள்ளிட்ட 16 இடங்களில் காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். மேலும், வியாழக்கிழமை நள்ளிரவு வாகனங்களில் வந்த நபா்களை எச்சரித்து அனுப்பிவைத்தனா். மாநகரில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்களுக்கு மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் கேக் வழங்கி உற்சாகமூட்டினாா்.