முத்துப்பேட்டை, கோட்டூா் பகுதிகளில் மழையால் சேதமடைந்த நெற்பயிா்களை திமுக விவசாய அணி அமைப்பாளரும் மக்களவை முன்னாள் உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா் .
காவிரி டெல்டா பகுதியில் கடந்த 15 தினங்களாக பெய்த கன மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. நாள் கணக்கில் தண்ணீா் தேங்கியதால் நெல் மணிகள் முளைத்தும், அழுகியும் வருகின்றன. இனிமேல், நீா் வடிந்தாலும் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், முத்துப்பேட்டை, கோட்டூா் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை மக்களவை முன்னாள் உறுப்பினா் ஏ.கே.எஸ். விஜயன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதில், திமுக கோட்டூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் பாலஞானவேல், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா்கள் ப.மோகன், சண்முகவேல், மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் ஜீவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


