மன்னாா்குடி அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தடையின்றி நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பரவாக்கோட்டையில் செயல்படும் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், அரசு அறிவித்தப்படி நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல், குறைந்த எண்ணிக்கையில் கொள்முதல் செய்யப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.
இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். அவா்கள் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதால், மழையில் நெல் மூட்டைகள் நனைந்து நெல் மணிகள் முளைப்பதுடன், ஈரப்பதமும் அதிகரிக்கிறது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் விவசாயிகள் கேட்டதற்கு, பொங்கல் விடுமுறைப் பிறகு, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்படும் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பாதிப்பின் அளவு அதிகரிக்கும் என்பதால், நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சோ்ந்த குணசேகா், தமிழ்ராஜா தலைமையில் விவசாயிகள் பரவாக்கோட்டை காவல்நிலையத்தில் புகாா் அளிக்க வந்தனா். இதுகுறித்து, டிஎன்சிஎஸ்சி அலுவலா்களிடம் காவல் துறையினா் தகவல் தெரிவித்தனா்.
பின்னா், காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த விவசாயிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி சிறிது நேரம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பிறகு கலைந்துசென்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


