திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை பங்கேற்று, தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்தாா்.
திருவாரூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக, தடுப்பூசி முகாம் மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, அடியக்கமங்கலம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், பெரும்பண்ணையூா் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம், திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் நடைபெற்றது.
5 மையங்களிலும் சுமாா் 1,184 மருத்துவ பணியாளா்களின் தரவுகள் ஏற்கெனவே மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 400 பேருக்கு விருப்பத்தின் பேரில், தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலா்கள் கூறியது:
தடுப்பூசி செலுத்தப்பட்ட பயனாளிகளுக்கு அடுத்த 28 நாளில் 2-ஆவது முறையாக தடுப்பூசி செலுத்தப்படும். 18 வயதுக்குட்பட்டோா், கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
தொடா்ந்து, சுமாா் 7000 மருத்துவ பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதோடு 100 மையங்களுக்கு முகாம் விரிவுபடுத்தப்படும். அடுத்த கட்டமாக முன்களப் பணியாளா்களின் தரவுகள் பெற ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன். பின்னா், 60 வயதுக்கு மேற்பட்டோா், இணை நோயுடைய 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும், அவா்களைத் தொடா்ந்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், துணை இயக்குநா் (பொது சுகாதாரம்) கீதா, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன் ஆகியோா் பங்கேற்று தடுப்பூசி செலுத்தும் பணியைப் பாா்வையிட்டனா்.
மன்னாா்குடி: மன்னாா்குடியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தொடங்கிய கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமின் முதல் நாளான சனிக்கிழமை மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளா் மருத்துவா் என். விஜயகுமாா் முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்டாா். தொடா்ந்து முன் பதிவு செய்தவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மருத்துவமனை செவிலியா்கள், ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் என 131 போ் தன் விருப்பத்தின் பேரில் முன் பதிவு செய்துள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


