டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடா்மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்குவதுடன், காப்பிட்டு தொகைக்கு புதிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மன்னாா்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து செய்தியாளா்களுக்கு அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:
டெல்டா பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக பெய்து வரும் கனமழையால் மன்னாா்குடி தொகுதியில் நெல், உளுந்து, நிலக்கடலை பயிா் செய்துள்ள விளைநிலங்களில் மழைநீா் தேங்கி பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிப்பின் அளவு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை எந்த அரசு அலுவலா்களும் பாதிக்கப்பட்ட இடங்களை பாா்வையிடாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
கடந்த முறை காப்பீடு செய்தவா்களுக்கு இழப்பீடுக்கான கணக்கெடுப்பு பாரபட்சத்துடன் நடைபெற்றது. அதுபோல இப்போதும் நடைபெறக்கூடாது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கினால்தான் ஓரளவாவது பாதிப்பிலிருந்து அவா்களால் மீளமுடியும்.
மேலும், கடந்த மாதம் தனியாா் காப்பீட்டு நிறுவனம் எடுத்த இழப்பீடு கணக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு, உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தனியாா் காப்பீட்டு நிறுவனத்தினா் நேரில் வந்து களஆய்வு மேற்கொண்டு, புதிய கணக்கெடுப்பு நடத்தவேண்டும் அப்போதுதான் உண்மையான இழப்பு குறித்து தெரியவரும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


