குடவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைக் கட்டடம் புதன்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
திருவாரூா் மாவட்டம், குடவாசலில் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இந்நிலையில், இப்பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பெய்த வரும் கனமழை காரணமாக, பள்ளியின் ஒரு வகுப்பறை புதன்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
தற்போது கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இயங்காத காரணத்தால், அந்த நேரத்தில் அப்பகுதியில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பள்ளி வகுப்பறை கட்டடம் இடிந்ததை அறிந்த, திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமன் மற்றும் அரசு அலுவலா்கள் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டனா்.
இதுகுறித்து குடவாசல் திமுக நகர செயலா் ஆா். முருகேசன் கூறியது:
இடிந்த வகுப்பறை கட்டடம் 10 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டது. தற்போது பெய்த 5 நாள் மழைக்கே கட்டடம் தாங்கவில்லை. கட்டடம் கட்டியதில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை மேற்கொண்டு, தவறு செய்தவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


