தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பனை பொருள்கள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு புதன்கிழமை கூறியிருப்பது:
நியாயவிலைக் கடைகளில் பனை பொருள்கள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தமிழக முதல்வா் தெரிவித்துள்ளதற்கு நன்றி. கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் பனை விதைகள் விதைப்பதை வழக்கமாகக் கொண்டு, பனை திருவிழாவையும் நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நடந்த பனை திருவிழாவில், ரேஷன் கடைகளில் கருப்பட்டி வழங்க வேண்டும், அரசு விழாக்களில் பனை பொருள்களை பரிசாக வழங்க வேண்டும், பனையின் சிறப்புகளை பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றினோம்.
இந்நிலையில், தமிழக முதல்வரின் அறிவிப்பு பனை பொருளாதாரம் மேம்பட உதவிடும். இதற்காக கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு சாா்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

