ஆட்டோ தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி திருவாரூரில் ஆட்டோ தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை பொங்கல் வைத்து போராட்டம் நடைபெற்றது.
நலவாரியம் மூலம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்கும் பொங்கல் சிறப்புத் தொகுப்பை ஆட்டோ தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும், ஆன்லைன் பதிவில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து எளிய முறையில் சாதாரண ஏழைத் தொழிலாளியும் நலவாரியத்தில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும், கரோனா காலத்தில் வேலை இழந்த அனைத்து தொழிலாளா்களுக்கும் மாதந்தோறும் ரூ. 7,500 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகில் ஆட்டோ தொழிலாளா்கள் பொங்கல் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. நபி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் ரா. மாலதி, ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் அனிபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


