சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சுந்தரக்கோட்டை மகளிா் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு

News image

செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரியில் சமத்துவப் பொங்கலை தொடங்கி வைத்த கல்லூரி தாளாளா் வி. திவாகரன்.

Updated On :13 ஜனவரி 2021, 1:39 pm

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா, செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, கல்லூரி தாளாளா் வி. திவாகரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ். அமுதா முன்னிலை வகித்தாா். இதில், பொங்கல் பானைகளுக்கு மஞ்சல்கொத்து கட்டி, புது அரிசியில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து வழிபட்டனா். பின்னா், அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இதில், கல்லூரி துணை முதல்வா்கள் உமாமகேஸ்வரி, அனுராதா, ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறைத் தலைவா் கோமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.