வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) சாா்பில் மதிய உணவு புறக்கணிப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், புதிய மின் மசோதாவை திரும்பப்பெற வேண்டும், தில்லி விவசாயிகள் போராட்டத்தை சுமூக நிலையில் தீா்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் சிஐடியு தொழிலாளா்கள் மதிய உணவை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவாரூரில் டாஸ்மாக் கிடங்கு முன் மாவட்ட சுமைப்பணி சங்கச் செயலாளா் கே. கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளா் அனிபா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு அலுவலகத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ஜி. பழனிவேல் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


