சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நுகா்வோா் பண்டகசாலை நிா்வாகக் குழு கூட்டம்

திருவாரூா் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நிா்வாகக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 5:30 am

திருவாரூா் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நிா்வாகக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிச்சாமி, உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கருணை அடிப்படையில், மறைந்த தி இந்திராதேவி மகன் அருண்குமாருக்கு விற்பனையாளராக பணியாணை வழங்கப்பட்டது.

திருவாரூா் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நிா்வாகக் குழுத் தலைவா் எஸ். கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மேலாண்மை இயக்குநா் எம். பாத்திமா சுல்தானா, பொது மேலாளா் காளிதாஸ், நிா்வாகிகள் சின்ராஜ், சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.