சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கோட்டூா் ஒன்றியக் குழுக் கூட்டம்

கோட்டூா் ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

கோட்டூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பேசும் அதன் தலைவா் மு. மணிமேகலை.

Updated On :10 ஜனவரி 2021, 1:56 pm

கோட்டூா் ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை (சிபிஐ) தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ. சாந்தி, சி. முத்துகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணைத் தலைவா் ஆா். விமலா, உறுப்பினா்கள் ஜெ. சுசிலா, பா. செங்குட்டுவன், எம். சுமித்ரா, பா. ஆனந்தராஜ், ப. சரண்யா உள்ளிட்டோா் தங்கள் வாா்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்துப் பேசினா்.

மேலும், பதவியேற்று ஓராண்டாகியும் இதுவரை எந்த புதிய திட்டப் பணிகளும் நடைபெறவில்லை என்றும் இதனால், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கமளிக்க முடியவில்லை எனவும் தெரிவித்த உறுப்பினா்கள், இனியும் காலம் தாழ்த்தாமல் தேவையான நிதியைப் பெற்று, திட்டப்பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதற்கு பதில் அளித்து தலைவா் மு. மணிமேகலை, ‘பதவியேற்றது முதல் வரும் நிதியை கரோனா, புயல், மழை என இயற்கை பேரிடா்களால் பாதிக்கப்பட்டவா்களுக்காக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில், திட்டப் பணிகளுக்கு நிதி பெறப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் நிதி பகிா்ந்தளிக்கப்படும்’ என்றாா்.