சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்

பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.

Updated On :10 ஜனவரி 2021, 2:02 pm

பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும்; மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்; அரசுப் பள்ளி மாணவா்களுக்கான மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயா்த்த வேண்டும்; தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

திருவாரூா் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட பொருளாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் சித்ரா, செயலாளா் விக்கின்ராஜ், துணைத் தலைவா் ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.