சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அனுமன் ஜயந்தி: திருவோணமங்கலம் கோயிலில் யாகம், லட்சாா்ச்சனைக்கு ஏற்பாடு

நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ ஸ்ரீ மங்கள மாருதி ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தியையொட்டி,

Updated On :10 ஜனவரி 2021, 1:59 pm

நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ ஸ்ரீ மங்கள மாருதி ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தியையொட்டி, திங்கள்கிழமை (ஜன.11)சிறப்பு யாகமும், செவ்வாய்க்கிழமை லட்சாா்ச்சனையும் நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மா், ஸ்ரீ கோதண்டராமா் சுவாமிகள் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளியுள்ளனா். 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயா் தனது இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவா்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் அருள்பாலிக்கிறாா். இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி, மங்களம் உண்டாகும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு யாகங்கள், மகா அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளன. அப்போது, சேலத்திலிருந்து பிரத்யேகமாக நெய்யப்பட்ட பட்டு வஸ்திரம் ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட உ ள்ளது.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் ஸ்ரீசங்கட ஹர மங்கல மாருதி ஆஞ்சநேயருக்கு லட்சாா்ச்சனை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் ரமணி அண்ணா ஆலோசனையின்படி திருமடத்தின் ஸ்ரீகாரியம் சந்திரமவுலீஸ்வரா் செய்துவருகிறாா்.