புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் இரண்டாவது நாள் விவசாயிகளின் நீதி கேட்டு நெடும்பயணம் திருவாரூரில் தொடங்கியது.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில், வேதாரண்யத்திலிருந்து தஞ்சாவூர் வரை விவசாயிகளின் நீதி கேட்டு நெடும் பயணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சனிக்கிழமை வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து தொடங்கிய பிரசாரப் பயணம் மயிலாடுதுறையில் நிறைவடைந்தது.
இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு விவசாயிகளின் நீதி கேட்டு நெடும்பயணம் துவங்கியது. இதில் விவசாயிகளுக்கு விரோதமான புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் பிரசார பயணத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தமிமுன் அன்சாரி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


