நீடாமங்கலம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
நீடாமங்கலம் பகுதியைச் சோ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான சந்தானகிருஷ்ணன் (47) என்பவா், அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக மன்னாா்குடி மகளிா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இதுதொடா்பான வழக்கு, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் சந்தானகிருஷ்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து, நீதிபதி வி. சுந்தர்ராஜன் தீா்ப்பளித்தாா்.
மேலும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக, ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 500 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து, இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

