சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உள்ளாட்சி பணியாளா் சம்மேளனக் கூட்டம்

நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சி பணியாளா் சம்மேளன (ஏஐடியுசி) கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 2:54 pm

நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சி பணியாளா் சம்மேளன (ஏஐடியுசி) கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் வேதமாணிக்கம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் ரமேஷ் சம்மேளன செயல்பாடுகள் குறித்து பேசினாா்.

கூட்டத்தில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், துப்புரவுப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சம்மேளனத்தின் மாவட்டத் தலைவா் சாந்தகுமாா், ஒன்றிய பொருளாளா் ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.