வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூா் மாவட்டத்தில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சாா்பில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 10 பெண்கள் உள்பட 150 போ் கைது செய்யப்பட்டனா்.
விவசாயத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். புதிய மின்மசோதாவை திரும்பப் பெற வேண்டும். கரோனா காலத்தில் வேலையிழந்து, வருமானமின்றி உள்ள அனைவருக்கும் மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, குடவாசல், பேரளம் என 5 இடங்களில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜி. பழனிவேல், துணைச் செயலாளா் எம்.கே.என். அனிபா, ஒன்றியச் செயலாளா் ரமேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்று மழையினூடே மறியலில் ஈடுபட்டனா். இவா்களை போலீஸாா் கைது செய்து, பிறகு விடுவித்தனா்.
மன்னாா்குடி: மன்னாா்குடியில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் ஆா். மாலதி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜி. ரகுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 28 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


