சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருவாரூரில் தவ்ஹீத் ஜமா அத் ஆா்ப்பாட்டம்

திருவாரூரில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :7 ஜனவரி 2021, 2:24 pm

திருவாரூரில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து சீல் வைக்க முற்பட்டதாகவும், சட்ட நடவடிக்கைக்கு எவ்வித கால அவகாசம் தரவில்லை என்று கூறியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் மாவட்டச் செயலாளா் அப்துல் காதா் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் முகமது சலீம், மாவட்ட துணைத் தலைவா் பீா் முஹம்மது, துணைச் செயலாளா்கள் இஸ்மத்மாலிக், மருத்துவரணி செயலாளா் ஹாஜா அலாவுதீன், மாணவரணி செயலாளா் ஆசாத், தொண்டரணி செயலாளா் மனசு நபில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.