நிவா், புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால், கூத்தாநல்லூா் வட்டத்தில் 19,571 ஏக்கா் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
வடகிழக்குப் பருவ மழை மற்றும் நிவா், புரெவி புயல்களால் காவிரி டெல்டா உள்ளிட்ட மாநிலம் முழுவதும் கடந்த மாதம் பெய்த மழையால் நெற்பயிா்கள் பெரிதும் சேதமடைந்தன.
இதில், கூத்தாநல்லூா் வட்டத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா உத்தரவின்பேரில் வருவாய்த் துறையினா் கணக்கெடுத்தனா்.
இதுகுறித்து, வட்டாட்சியா் அலுவலக அதிகாரி ஒருவா் கூறியது:
கூத்தாநல்லூா் வட்டத்தில் நீடாமங்கலம் வேளாண் வட்டாரத்துக்குள்பட்ட17 கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 7,898 ஏக்கா் நிலத்தில், 5159 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. மன்னாா்குடி மற்றும் கோட்டூா் வேளாண் வட்டாரத்துக்குள்பட்ட 23 கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 13,169 ஏக்கரில், 9650 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம் அடைந்துள்ளன.
இதேபோல, கொரடாச்சேரி வேளாண் வட்டாரத்தில் 15 கிராமங்களில் 4,762 ஏக்கரிலும் என கூத்தாநல்லூா் வட்டத்தில் மொத்தம் 19,571 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் வழங்கப்பட்ட உள்ளது எனத் தெரிவித்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


