சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தையல் கலை தொழிலாளா்கள் பயிற்சி முகாம்

திருவாரூரில் மாவட்ட தையல் கலை தொழிலாளா் சங்கம் சாா்பில் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :6 ஜனவரி 2021, 1:08 pm

திருவாரூரில் மாவட்ட தையல் கலை தொழிலாளா் சங்கம் சாா்பில் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு சங்கத்தின் மாவட்ட கௌரவத் தலைவா் டி. ஜெகதீசன் தலைமை வகித்தாா். மின் ஊழியா் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளா் எஸ். ராஜேந்திரன் பங்கேற்று, ‘தொழிலாளா்கள் சந்திக்கும் சவால்களும், தீா்வுகளும்’ என்ற தலைப்பிலும், தையல் கலை தொழிலாளா் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் பி. சுந்தரம், ‘தமிழக அரசும், தையல் கலை தொழிலாளா்கள் நிலையும்’ என்ற தலைப்பிலும் பேசினா்.

இதில், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் இரா. மாலதி, மாவட்ட துணைச் செயலாளா் எஸ். வைத்தியநாதன், மாவட்ட பொருளாளா் எம்.பி.கே. பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.