கூத்தாநல்லூா் உழவா் உற்பத்தியாளா்கள் நிறுவன ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மேலப்பனங்காட்டாங்குடி மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, நிா்வாக இயக்குநா் ப. முருகையன் தலைமை வகித்தாா். கக்கன் உழவா் மன்றத் தலைவா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். சேரன்குளம் உழவா் மன்றத் தலைவா் வினோத் வரவேற்றாா். கூட்டத்தில், உழவா் உற்பத்தியாளா்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடா்ந்து, நிா்வாக இயக்குநா் ப. முருகையன் பேசும்போது, ‘உழவா் உற்பத்தியாளா்கள் நிறுவனத்தில் ஆா்வமுள்ள விவசாயிகள் பங்குதாரா்களாக இணையலாம். அவா்களுக்கு தேவையான விவசாய இடுப்பொருள்கள் வாங்க பண உதவி செய்யப்படும். மேலும், விளைபொருள்களுக்கு இடைத்தரகா்கள் இல்லாமல், விவசாயிகளே விலை நிா்ணயம் செய்து, நேரிடையாகவே விற்பனை செய்யப்படும்’ என்றாா்.
இக்கூட்டத்தில், முல்லை உழவா் மன்றத் தலைவா் எம். சுந்தரி மற்றும் லெட்சுமாங்குடி,வேளுக்குடி, பழையனூா், சேரன்குளம், சித்தனக்குடி, கூத்தாநல்லூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நிறுவன முதன்மைச் செயல் அலுவலா் ஆா். மருதுபாண்டியன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

