திருவாரூரில், நிவாரணத் தொகையை ரூ. 20 ஆயிரமாக உயா்த்தி வழங்க உத்தரவிட்ட முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூரில், தமிழக விவசாயிகள் நலச்சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் ஜி. சேதுராமன் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் பாலகுமாரன், பொதுக்குழு உறுப்பினா்கள் சத்தியமூா்த்தி, பக்கிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புயல், கனமழை காரணமாக சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணத் தொகையை ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரமாக உயா்த்தி அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், 213 வருவாய் கிராமங்களில் விடுபட்டுள்ள பயிா் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதேபோல, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவா் பி.ஆா். பாண்டியன், காவிரி டெல்டா விவசாயிகள் குழுமத்தின் மாநிலச் செயலாளா் வெ. சத்யநாராயணன் ஆகியோரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


