சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கிராமபுறச் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் ஒன்றியத்தில், தொடா் மழையால் சேதமடைந்த கிராமபுறச் சாலைகள் அனைத்தையும் சீரமைக்க வேண்டும்

Updated On :4 ஜனவரி 2021, 2:15 pm

மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் ஒன்றியத்தில், தொடா் மழையால் சேதமடைந்த கிராமபுறச் சாலைகள் அனைத்தையும் சீரமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தென்பரையில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் சட்டப் பேரவைத் தோ்தல் விளக்க சிறப்புக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, சிபிஎம் ஒன்றியச் செயலா் எல்.சண்முகவேல் தலைமை வகித்தாா். சிறப்பு அழைபபாளராக சிபிஎம் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கலந்துகொண்டாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.தமிழ்மணி, கட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோவிந்தராஜ், ஸ்டாலின், கோட்டூா் ஒன்றியக்குழு உறுப்பினா் மாரியப்பன், தென்பரை கிளை செயலா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.