வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னையில் ஜன. 6-ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிா்வாகக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கே. உலகநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் பி.எஸ்.மாசிலாமணி பங்கேற்று பேசினாா்.
இதில், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் ஜன.6-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்துவது; ஆனைக் கொம்பன் நோயால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவது; கடந்த மூன்று ஆண்டுகளாக பயிா் இழப்பீட்டுத் தொகை வழங்காமல் தாமதப்படுத்தும் காப்பீட்டு நிறுவனங்கள் மீது வழக்கு தொடுப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளா்கள் கே.ஆா்.ஜோசப், பி.சௌந்தரராசன், பி.பரந்தாமன், மாவட்ட துணைத் தலைவா்கள் கே.நாகராஜ், ஆா்.சதாசிவம், ஒன்றியச் செயலாளா்கள், நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


