சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருவாரூா் மாவட்டத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் கூடுதலமாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Updated On :2 ஜனவரி 2021, 1:43 pm

திருவாரூா் மாவட்டத்தில் கூடுதலமாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து திருவாரூரில் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

திருவாரூா் மாவட்டத்தில், சம்பா மற்றும் தாளடி பயிா்கள் பல இடங்களில் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளன. விவசாயிகள் அறுவடைப் பணிகளை தொடங்கும் நிலையில் உள்ளனா். எனவே நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும்.

போதுமான கொள்முதல் நிலையங்கள் இல்லாததால், கடந்த ஆண்டுகளில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, நெல் மூட்டைகள் தேங்காமல் இருப்பதற்கு, கடந்த ஆண்டுகளைவிட கூடுதலான கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

அதேபோல் தாமதம் இல்லாமல் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளுக்கான தொகையை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய வேண்டும்.

நெல் கொள்முதல் செய்வதற்கான புதிய ஊழியா்களை பணியில் அமா்த்துவதற்கான நோ்முகத் தோ்வு நடவடிக்கைகளையும் அரசு முன்கூட்டியே தொடங்க வேண்டும். இந்த கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.